கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமான லாகூர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக முடக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் பாகிஸ்தான் போராடி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரங்களில் 4,414 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
இவற்றுடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 18 ஆயிரத்து 144 கொரோனா மரணங்களும் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே அதிக தொற்று நோயாளர்கள் பரவி வரும் லாகூர் நகரம் வார இறுதி நாட்களில் முற்றாக முடக்கப்பட்டது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்